search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி மோதி வாலிபர் பலி"

    • லாரி மோதி வாலிபர் பலியானார்
    • ஊருக்கு திரும்பி வந்த போது விபத்து

    திருச்சி

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள சீதேவிமங்களம் கிராமம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் டி.களத்தூருக்கு சொந்த வேலை காரணமாக சென்றிருந்தார். பின்னர் ஊருக்கு திரும்பிய அவர் மீது அந்த வழியாக செட்டிகுளம் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை இறக்கிவிட்டு திரும்பிய லாரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்தும் பாடாலூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×